விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும், என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தனது நாடாளுமன்ற உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நவீன சுத்தமான எரிசக்தியை பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில், தனிமனித ஆயுட்காலம் சராசரியாக 80 மற்றும் 85 ஆண்டுகள்.
எரிவாயு கொள்வனவு செய்ய சிரமப்படும், விறகுகளை பயன்படுத்தும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 80.1 ஆண்டுகளாகும்.
அதன்படி, நவீன மற்றும் சுத்தமான வலுசக்தியை பயன்படுத்தும் வளர்முக நாடுகளில் உள்ள ஆண்களின் ஆயுட்காலத்தை காட்டிலும் விறகு பயன்படுத்தும் இந்நாட்டு பெண்களின் ஆயுட்காலம் அதிகம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.