தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய அணியை தொடங்கினார். துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல்வேறு கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். மேலும் பல போட்டிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளார்.




