வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாக மோசடி ! பொதுமக்களுக்கு இலங்கை பணியகம் எச்சரிக்கை

0
179

வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகக்கூறி நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் முன்னெடுக்கப்படும் ஆட்சேர்ப்புக்கு அமைவாக தொழில்களைப் பெற்றுத் தருவதாகக்கூறி இந்த மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்புகளுக்காக உள்வாங்கும் மற்றும் பயிற்சியளிக்கும் பணிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படுவதானது, இரு நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்படிக்கைகளுக்கு அமைய, அனுமதி வழங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் ஊடாக மாத்திரமே கொடுக்கப்படும் என அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here