இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு (FDI) ,2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 96 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற செயன்முறை குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலீட்டு சபை (BOI) நேற்று இதை வெளியிட்டது.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு முதலீடு 21 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது, இதே நேரத்தில் ஏற்றுமதி வருமானம் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 176 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை மொத்தமாக 4,669 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டு திட்டங்களை ஈர்த்துள்ளது.
இதேவேளை குறித்த கூட்டத்தில் நாட்டிற்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பில் காணப்படும் சிக்கல் மற்றும் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தபட்டதுடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான சாத்தியமான உத்திகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.