இரசாயன உர இறக்குமதிக்கு எதிரான தடையை நீக்குவதற்கும், கிளைபோசெட் பாவனைக்கான தடையைத் தொடர்ந்தும் அமுல்படுத்தும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இரசாயன உர வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தமையினால் நாடளயாவிய ரீதியில் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனால் விவசாய மற்றும் ஏனைய உற்பத்திகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன் விசாய உற்பத்திகளின் விலையும் அதிகரித்திருந்தது. இதனால் விற்பனையாளர்கள், உற்பத்தியார்கள் , நுகர்வோர் என பலரும் அசௌகரியத்திற்கு உள்ளாக நேரிட்டது.
இந்நிலையில் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு உரிய தரப்பினர் அழுத்தங்களை பிரயோகித்து வந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



