வைத்தியசாலையில் குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை, விபத்தில் பலி

0
96

கொழும்பு – காலி பிரதான வீதியின் வடக்கு பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மக்கொன , அக்கரமலை பிரதேசத்தை சேர்ந்த , ஒரு குழந்தையின் தந்தையான 25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது குழந்தையைப் பார்க்க மோட்டார் சைக்கிளிள் சென்றுக்கொன்டிருந்த போது பேருந்தொன்றை கடந்து செல்ல முற்பட்ட நிலையில் , ​​எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் , இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here