
மினுவங்கொடை பொலிஸ் பிரிவின் உன்னருவ பகுதியில் 1.66 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 308 கிராம் “ஐஸ்”போதைப்பொருள் வைத்திருந்த 37 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கோனஹென முகாமின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை (8) நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.