பொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது டயகம பகுதியில் தாக்குதல் சம்பவம்!!

0
123

பொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது டயகம பகுதியில் தாக்குதல் சம்பவம்.

அக்கரபத்தனை பிரதேச சபையின் கீழ் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் டயகம பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 24.01.2018.புதன் கிழமை மாலை 04.30மணி அளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பலத்தகாயங்களுக்குள்ளான எஸ்.ராஜ்குமார் டயகம வேவர்லி தோட்டபகுதியை சேர்ந்தவர்யெனவும் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்கை பெற்று வருவதாக டயகம பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த வேட்பாளர் வசித்தும் வேவர்லி தோட்டபகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் இருவர் மது போதையில் வந்த இருவரே தாக்குதல் நடத்தியதாக காயங்களுக்குள்ளான பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் டயகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபட்ட முறைபாட்டில் இருந்து தெரியவந்துள்ளது.

காயங்களுக்கு உள்ளான ராஜ்குமாருக்பு வலது காது பக்கத்திலும் வலது கையிலம் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

05 06 07 02

இந்த தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட குடும்பதகராறு காரணமாவே சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யபட்ட இருவரும் 25.01.2018. வியாழக்கிழமை நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ், புஸ்பராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here