காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் சிறுத்தையின் உடலம் மீட்பு.
ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் லெதன்டி தோட்டபகுதியில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடலம் ஒன்று இனங்கான பட்டுள்ளதாக ஹட்டன பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 07.02.2018 புதன்கிழமை காலை காலை 09.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது .
குறித்த லெதன்டி தோட்டமக்களால் ஹட்டன் பொலிஸாருக்க வழங்கபட்ட தகவலின் அடிபடையில் சம்பவம் இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுத்தையை மீட்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
உடலமாக மீட்கபட்ட சிறுத்தைக்கு கழுத்து பகுதியில் காயங்கள் காணபடுவதாகவும் இது தொடர்பாக வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்