தனிமையில் இருந்த சிறுமி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்ப்பு; பொகவந்தலாவையில் சம்பவம்!

0
91

தீ காயங்களுடன் 11வயது பாடசாலை சிறுமி ஒருவர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் இந்த சம்பவம் 11.09.2018. செவ்வாய்கிழமை 04.15மணி அளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ கெம்பியன் மேற்பிரிவை சேர்நத குறித்த சிறுமி வீடடில் அடுப்பிற்கு அருகாமையில் அருகில் அமர்ந்திருந்த சமயம் எதிர்பாராமல் அவரது உடையில் தீப்பற்றிக்கொண்டது, சிறுமியின் அலறல் கேட்டு ஊர்மக்கள் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

சிறுமியின் உடலில் எறிகாயங்கள் எற்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இவ்வாறு எறிகாயங்களுக்கு உள்ளான சிறுமி 11வயது தரம்06ல் கல்வி பயிலும் எம்.பவித்ரா என்ற சிறுமியே இவ்வாறு பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகினார் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த சமயம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலதிக சிகிச்சைக்காக சிறுமி டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகலை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது,

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here