அதிக சொத்துக்களை கொண்டவர்களுக்கு சிக்கல்!

0
63

வரிகளை வசூலிப்பதற்காக அடுத்த ஆண்டு (2025) சொத்து வரி, பரிசு மற்றும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.

மேலும், வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் வருவாயை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி கூறியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விளக்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 15 சதவீதத்தை கடந்து வருவாய் இலக்குகளை அடைவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தனிநபர் வருமான வரிக்கு தனிநபர்களின் பதிவு கட்டாயமாக்குதல், அதிக சொத்துக்கள் கொண்ட வரி செலுத்துவோர் மற்றும் வரி செலுத்துவோர் அலகுகளை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வருவாய் நிர்வாகம் மற்றும் மேலாண்மை தகவல் அமைப்பை (RAMIS) மேம்படுத்துதல் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி முறையை ஒழித்தல் என்பன நிறுவனங்களின் வருவாய் நிர்வாக நடவடிக்கைகளை மேம்படுத்தும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here