அநுர அரசின் புதிய பிரதமர்: வெளியான அறிவிப்பு!

0
84

அநுர (Anura Kumara Dissanayake) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் (NPP) புதிய அரசாங்கத்தில் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் (Sri Lanka) 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு புதிய சாதனையை படைத்தது.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அமைச்சரவையின் அமைச்சர்கள் நாளையதினம் (1811.2024) பதவியேற்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி குறித்த நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.இந்த பதவியேற்பு நிகழ்வில் தற்போது பிரதமராக இருக்கும் ஹரிணி அமரசூரிய தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தில் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

மேலும் விஜித ஹேரத்துக்கு (Vijitha Herath) பலம் வாய்ந்த அமைச்சுப் பதவி ஒன்று கிடைக்கப் போவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுக்களை ஜனாதிபதியின் கீழ் வைத்திருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரவை இருபத்தைந்து பேருக்கு மட்டுப்படுத்தப்படும் எனவும் சில அமைச்சுக்களுக்கு பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளதாக அசியல் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here