தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண் விஜய், இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் தனது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்
1995-ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாப்பிள்ளை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அருண் விஜய், பின்னர் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றார். தொடர்ந்து ‘தடம்’, ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘மாபியா’, ‘வணங்கான்’ உள்ளிட்ட படங்களின் வெற்றியால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் அவரது 36-வது திரைப்படமான ‘ரெட்ட தல’ வெளியானது. இதையடுத்து, அறிவழகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் விநியோகச் சிக்கலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. தற்போது ‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
கதாநாயகியாக மிர்ணா மேனன்?
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா மேனன், இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், மிர்ணா மேனனின் இணைவு குறித்து படக்குழு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




