அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் – இந்திய அணி அறிவிப்பு

0
129

அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 22ம் திகதி பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் (Punjab Cricket Association Stadium) நடைபெறவுள்ளது.

அதற்கமைய, கே.எல்.ராகுல் தலைமையில் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு முதல் இரண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here