சோறு, கொத்து, தேநீர், பால் தேநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் இன்று(01) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேநீர் 5 ரூபாவினாலும் பால் தேநீர் 10 ரூபாவினாலும் சிற்றுண்டிகள் (சோர்ட் ஈட்ஸ்) 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என அதன் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்திருந்தார்.
மேலும், சோறு, ப்ரைட் ரைஸ், கொத்து மற்றும் நாசிகுரான் என்பன 25 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில், கோட் சூட் அணிந்த கொத்து பாஸ் ஒருவர் ஊடகங்கள் முன்னிலையில், உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதாகவும், ஒரு ரூபாய் ஏனும் உணவு விலையை உயர்த்தும் எந்தவொரு உணவகத்திற்கும் செல்ல வேண்டாம் என்றும், அத்தகைய உணவகங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுமாறும் நுகர்வோரிடம் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.