உணவு விஷமானதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் 30 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி, திகன பிரதேசத்தில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக மாணவர்கள் குழு வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று சுகவீனமடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
எனினும் நிலைமை மாணவர்கள் கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.