336 உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவால் இந்த அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்று மதியத்துடன் நிறைவுபெற்றது.
இந்நிலையில் இன்று நண்பகல் 12 மணிவரை வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டன.