காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எவன் கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுதக் கப்பலின் தலைவரான உக்ரைன் நாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினார் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத ஆயுத விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, சந்தேகநபர் தற்சமயம் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.