ஐ.தே.கட்சியின் புதிய அங்கத்துவ தேர்வு பிரதமர் தலைமையுடன் சிரிகொதவில் இன்று!

0
131

நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 30 வீதமானவர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வு இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிரிகொதவில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் 92 ஆவது பிறந்த தின நிகழ்வையொட்டி ஆரம்பிக்கப்படவுள்ள இச்செயற்திட்டம், அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

இவ்வாறு அங்கத்தவர்களாக இணைந்துகொள்பவர்களுக்கு இலத்திரனியல் அங்கத்துவ அட்டையும் வழங்கப்படவுள்ளதாகவும் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here