கணக்கு விபரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

0
96

வருடாந்தம் இலங்கை அரச நிதி கணக்காய்வாளர் சங்கம் மற்றும் இலங்கை பட்டய கணக்காய்வாளர் நிறுவனம் என்பன இணைந்து நடாத்தும் சிறந்த கணக்காய்வு அறிக்கை மற்றும் கணக்கு விபரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2022.12.02 ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் 2021 ஆம் ஆண்டுக்கான சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு விபரங்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை பிரதேச சபை பெற்றுக் கொண்டது.

இந்த விருதினை பெறுவதற்கு உத்தியோகத்தர்களை ஊக்குவித்த கொட்டகலை பிரதேச சபையின் செயலாளர் அவர்களுக்கும் கௌரவ உப தலைவர் மற்றும் கௌரவ உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதோடு. நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு மட்டுமே இவ்விருது கிடைக்கபெற்றது என்பதில் பெருமிதம் அடைகிறேன்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here