கனடாவில் நடந்தது பயங்கரவாத தாக்குதலா? பொலிஸார் விளக்கம்

0
4
toronto.citynews.ca

கனடாவின் மொண்ட்ரியாலில் (Montreal) ஒரு பொலிஸ் அதிகாரி மற்றும் ஒரு சிவிலியன் உட்பட மூன்று பேர் உயிரிழப்பதற்குக் காரணமான துப்பாக்கிச்சூடு சம்பவம், பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று கியூபெக் (Quebec) பொதுப் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கோட்-டெஸ்-நெய்ஜஸ் (Côte-des-Neiges) பகுதியில் திங்கட்கிழமை காலை நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டை அடுத்து, அப்பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பல மணிநேர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் மற்றொரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

மேலும் ஒரு சிவிலியன் லேசான காயங்களுக்குள்ளானார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரி, 2021 ஆம் ஆண்டு முதல் காவல்துறையில் பணியாற்றி வந்த 34 வயதான முகமது லமைன் பென்ரெடோவன் (Mohamed Lamine Benredouane) என மொண்ட்ரியால் காவல்துறை (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here