கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் வைத்தியர் இருவருக்கு நேர்ந்த விபரீதம்

0
85

பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட மருத்துவர் ஒருவர் பயணித்த கார் திடீரென இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி கண்டி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விசேட மருத்துவர் சிறு காயங்களுடன் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (04) மதியம் 12.30 மணியளவில் விபத்து இடம்பெற்ற போது மருத்துவரின் மனைவியும் வாகனத்தில் இருந்துள்ளார், அவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் விசேட மருத்துவராக கடமையாற்றுகின்றார்.

அவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதால் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மல்வத்து மகா விகாரையின் சங்கராஜ பிரிவேனாவிற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அப்போது வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த இருவரையும் வெளியே எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக காவல்துறை பிரிவின் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here