ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் தெற்கு காஷ்மீருக்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுவரை வெளியான தகவலின்படி, இந்தத் துப்பாக்கி சூட்டில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பின்னால் ‘நாங்கள் தான் இருக்கிறோம்’ என்று ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா-வின் ஒரு பிரிவாக சொல்லப்படுகிறது.
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ அமைப்பு ஆன்லைன் மூலம் இளைஞர்களை வேலைக்கு எடுத்தல், ஆயுதங்களை வாங்குதல், போதை பொருள்களை கொண்டு வருதல், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்தல் போன்ற நாசவேலைகளை செய்துவருகிறது எனவும் கூறப்படுகிறது.