கினிகத்தேனை பகுதியில் முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டுவிலகி சுமார் இருநூறு அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு குணசிங்கபுர பகுதியிலிருந்து அட்டன் நோக்கி பயணித்து கொண்டிருந்தபோதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரம்பாதெனிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
முச்சக்கரவண்டி சாரதி நித்திரை கொண்டதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, காயமுற்ற சாரதி உட்பட மூவரும் மேலதிக சிகிச்சைக்காக வட்டவளை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் தீபாவளியை கொண்டாட அட்டன் நோக்கி பயணித்தவர்கள் என தெரியவருகிறது.