கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் நிலைதடுமாறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 6 வயது சிறுமி!

0
230

மராட்டிய மாநிலத்தில் உள்ள பேக்கரி ஒன்றின் சமையல் அறையில் கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த மாதம் 30-ம் திகதி (30-03-2023) மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் லஹம்பூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, அந்த பேக்கரியின் உரிமையாளர் தனது 6 வயது மகளான வைஷ்ணவியை கடந்த 30-ம் தேதி பேக்கரிக்கு அழைத்து வந்துள்ளார்.

சிறுமி வைஷ்னவி பேக்கரியின் சமையல் அறையில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெய் சட்டிக்குள் சிறுமி விழுந்தார்.

இதில், படுகாயமடைந்த சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுமி நேற்றுமுன்தினம் தினம் (02-04-2023) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here