க.பொ.த சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

0
197

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் தவறுகள் ஏதும் காணப்பட்டால் அவை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.

“க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வரும் டிசெம்பர் 3ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

அனைத்துப் பரீட்சாத்திகளுக்குமான அனுமதிப்பத்திரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தபால்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. அனுமதிப்பத்திரத்தில் தவறுகள் காணப்பட்டால் அவை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here