க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் தவறுகள் ஏதும் காணப்பட்டால் அவை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.
“க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வரும் டிசெம்பர் 3ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
அனைத்துப் பரீட்சாத்திகளுக்குமான அனுமதிப்பத்திரங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தபால்மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. அனுமதிப்பத்திரத்தில் தவறுகள் காணப்பட்டால் அவை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்துக்கு உடனடியாக அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.