சஜித் மற்றும் வட,கிழக்கு எம்.பிக்களுக்கு இடையில் சந்திப்பு!

0
53

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை அண்மையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிவதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்து காணப்பட்டன. குறித்த பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு எதிர்க்கட்சி என்ற ரீதியில் அவசியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தலையீடு செய்வதும், இச்சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் நான் நேரடியாக தலையீடு செய்வேன் என்றும் இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இங்கு தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here