சிவனொளி பாத மலைக்கு யாத்திரிகளாக சென்ற 22 பேர், கஞ்சா பொதிகளுடன் கைது!

0
110

நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கேரளா கஞ்சா 57 ஆயிரம் மில்லிகிராம் கஞ்சா எடுத்துச் சென்ற 22 பேர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் விசேட குற்றத்தடுப்பிரிவு மோப்ப நாயின் உதவியுடன் 20.01.2018 அன்று அட்டன் கொழுமபு; பிரதான வீதியில் தியகல பகுதியில் மாலை 4. மணி தொடக்கம் இரவு 8. மணி வரை மேற்கொண்ட தேடுதல் நடவகையின் போது 20 பேரும் அட்டன் புகையிரத நிலையத்தில் மேற்கொண்ட தேடுதலின் போது 02 பேருமாக மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அவிசாவளை, பாதுக்க, ஹங்வெல்ல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று இச்சந்தேக நபர்கள் 21.01.2018 அன்றைய தினம் அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்-எஸ் .சதீஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here