சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்கள் பாதிப்பு

0
102

இந்த நாட்களில் நாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக 10 மாவட்டங்களில் 25,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி, நுவரெலியா, புத்தளம், குருநாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் 6,250 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (03) 24 மணித்தியாலங்களில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் இது சுமார் 72 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும் இன்று (04) நாட்டின் மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here