சுகாதார பொருட்களின் விலையேற்றம் : பாடசாலையில் மாணவிகளின் வரவு வீழ்ச்சி

0
165

சனிடறி நாப்கின் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, பருவ வயதுப் பெண் பிள்ளைகள் மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்கு செல்வது குறைவடைந்துள்ளதாக, மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிததுள்ளது.

அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ, ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக பாடசாலைகளில் காலை பிரார்த்தனை நிகழ்வுகளின் போது மாணவர்கள் மயங்கி விழுவது அதிகரித்துள்ளதாக, தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here