சைக்கிள் – வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்னொருவர் பலி!

0
19

மினுவாங்கொடை – வெயாங்கொடை வீதியில் பமுனுவ சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொடையிலிருந்து வெயாங்கொடை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் இருந்து வந்த வேன் மீது மோதியதில் நேற்று (15) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த சைக்கிளோட்டியும், பெண் பயணியும் மினுவாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பெண் பயணி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உடுகம்பல, ஹெந்திமஹார பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் கம்பஹா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here