டாக்கா தாக்குதல்: இரு இலங்கையர்கள் உட்பட பிணைக்கைதிகளில் 12 பேர் மீட்பு!

0
154

டாக்கா – வங்காளதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல் கய்டா தீவிரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

உணவகத்தினுள் தீவிரவாதிகளின் பிடியில் பலர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய தகவலின் படி,

1. இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

2. அவர்களில் இலங்கையைச் சேர்ந்த இருவர் மீட்கப்பட்டு விட்டதாக இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

3. உணவகத்தின் உள்ளே கொடூரமாகக் கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்களை ஐஎஸ் வெளியிட்டுள்ளது.

4. மேலும் தற்போது புதிதாக துப்பாக்கிச் சூடு நடக்கும் சத்தம் கேட்டதாகவும் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here