தகவலறியும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 23 ஆம் திகதி நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் தற்போது இடம்பெற்று கொண்டிருக்கிற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.