தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்தும் இலங்கை மலையக இலக்கியம் 200 பன்னாட்டு கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு அழைப்பிதழ் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சிறப்புரை ஆற்றும் செந்தில் தொண்டமான்,இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட மலையக தமிழர்களின் வரலாறு குறித்தும், அவர்களுடைய தற் போதைய வாழ்வாதார நிலை,வாக்குரிமை, பிரஜாவுரிமை வழங்கப்பட்டமை தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றி இன்று சிறப்புரை ஆற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.