தனியார் பஸ்களில் பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்கப்படவில்லையா?? உடன் அழையுங்கள்!!

0
279

தனியார் பஸ்களில் பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் குறிப்பிட்ட பஸ்குறித்து அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.இது தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாக குழுவின் மேல்மாகாண வீதிகள் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித்த குலரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக பணத்தை அறவிடும் பஸ் குறித்து அறிவிப்பதற்கு விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் 011 555 9595 என்ற தொலைபேசியினூடாக முறைப்பாடுகளை தெரிவிக்கமுடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here