தலவாகலையில் தேயிலை மலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டோர் கைது!!

0
172

தேயிலை மலையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த 5 பேரை கைது செய்துள்ளதுடன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 1லட்சத்து பத்தாயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்மிக்கல காட்டுப்பகுதியிலே 24.03.2018 மாலை 4 மணியளவில் பொலிஸானால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக மேற்படி காட்டுப்பகுதியில் சூதாட்டம் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

04 05

கைது செய்யப்பட்ட கொட்டகலை தலவாக்கலை லிந்துலை பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர்களை 25.03.2018 நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here