தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த 21 வயது யுவதி

0
76

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில் தவறான முடிவெடுத்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்றைய தினம்(26) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த யுவதி தனது வீட்டில் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் கிருபாஜினி (வயது 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here