தொண்டையில் பணிஸ் சிக்கியதால் முதியவர் ஒருவர் பலி – யாழில் சம்பவம்!!!

0
127

யாழ்ப்பாணம் டேவிட் வீதியை சேர்ந்த முதியவர் பணிசும் தேநீரும் உட் கொண்ட வேளை அவை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்தார்.

அதே இடத்தை சேர்ந்த செலஸ்ரின் பெஞ்சமின் என்பவரே உயிரிழந்தவராவார்.

உணவு உட்கொள்ளும் போது அவர் மயங்கியுள்ளார் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்க பட்டது.

திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேம்குமார் விசாரணை நடத்திய பின்னர் சடலம் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here