இலங்கை தொழிலாளர் காங்ரசின் உறுப்பினரும் முன்னால் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினருமான ஆர்.ரெங்கராஜ் தொழிலாளர் தேசிய சங்கத்தோடு 02.07.2018. திங்கள் கிழமை காலை தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்து கொண்டார்இதன் போது முன்னால் பிரதேசசபையின் உறுப்பினர் ஆர். ரெங்கராஜ் உட்பட 50ஆதரவாளர்களோடு இனைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இதன் போது தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்டகட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனிதிகாம்பரம் முன்னிலையில் இணைந்து கொண்டார். இதில் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் சிவநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்ரசின் உறுப்பினரும் முன்னால் அம்பகமுவ பிரதேசசபையின் முன்னால் பிரதேசசபையின் உறுப்பினர் ஆர்.ரெங்கராஜ் தெரிவிக்கையில் நான் கடந்த 35வருடகாலமாக எனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்ரசோடு இணைந்து செயல்பட்டு வந்தேன்.
இலங்கை தொழிலாளர் காங்ரஸ் என்னை மதிக்கவும் இல்லை எனக்கு மரியாதை வழங்கவும் இல்லை ஆகவே 02.07.2018.திங்கள் கிழமையில் இருந்து அமைச்சர் பழனி திகாம்பரத்தோடு இணைந்து எனது அரசியல் நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக முன்னால் அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர் ஆர்.ரெங்கராஜ் குறிப்பிட்டார்.
இதேவேலை இன்றைய தினம் என்னோடு 50ஆதரவாளர்ளோடு இணைந்திருக்கின்ற இதேவேலை மேலும் 200ஆதரவாளர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைய உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)