பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட காணிவிவகாரத்தில் இ.தொ.கா. தோட்டதலைவர் மற்றும் மலையமக்கள் முன்னணி பெண் ஆதரவாளர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
களனிவெளி தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு சொந்தமான பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட தேயிலை காணியை தோட்ட தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தோட்ட தலைவர் மீது மலையக மக்கள் முண்ணனியின் ஆதரவாளர்கள் 16பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தோட்ட தலைவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் இதேவேலை மலைய மக்கள் முண்ணனியின் பெண் ஆதரவாளர் கோடாரியால் தாக்கபட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த தாக்குதல் சம்பவம் 17.04.2018. செவ்வாய்கிழமை இரவு 07மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட தொழிலாளர்களுக்கு காணி பகிர்ந்தளிக்க போவதாக தோட்ட நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிவுருத்தல் வழங்கியிருந்தது. தோட்ட காணிகளை பகிர்ந்தளிக்க இடமளிக்கமாட்டோம் என வழியுருத்தி பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட மக்களால் ஆர்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கபட்டது.
ஆர்பாட்டம் இடம் பெற்ற ரொப்கில் தோட்ட பகுதிக்கு விடயத்தை அறிந்த இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் குறித்த தோட்டபகுதிக்கு சென்று தோட்ட நிர்வாகத்தோடு கலைந்துரையாடி ரொப்கில் தோட்ட தேயிலை காணியை பகிர்ந்தழிக்க வேண்டாமென கலந்துரையாடலின் போது தீர்மானம் ஏட்டபட்டது.
அதற்கமைய மலையக மக்கள் முண்ணனியின் 16ஆறுபேர் கொண்ட ஆதரவாளர்கள் 17.04.2018 செவ்வாய் கிழமை காலை ரொப்கில் தோட்ட தேயிலை காணி தோட்ட தொழிலாளர்களுக்கு பகிந்தளிக்கபட வேண்டும்மென கோறி எதிர்பினை வெளிபடுத்தி இருந்த வேலை மீண்டும் இந்த பிரச்சினை தொடர்பில் குறித்த தோட்டத்தின் இ.தொ.கா.தோட்டதலைவர் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக பொகவந்தலாவ இ.தொ.கா.காரியாளயத்திற்கு சென்று கடிதம் ஒன்றை சமர்பித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த வேலையில் இவர் தாக்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தாக்கதலுக்கு உள்ளான தோட்ட தலைவரை பார்யிட்டமையும் குறிப்பிடதக்கது.
சம்பவம் தொடர்பில் மலையக மக்கள் முண்ணனியின் 16ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)