நான்கு வருட காலமாக தியானத்தில் இருந்தவர் மரணம்! ;காரைதீவில் சம்பவம்!

0
121

பவளன்  என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம் வயது 57(பொறியியலாளர்) நான்கு வருட காலமாக காரைதீவு 7 விஷ்ணு கோவில் வீதியில் காணப்படும் கட்டிடம் ஒன்றில் காயத்திரி மந்திரம் கூறி தியானத்தில் இருந்துள்ளார்.

அண்மைய காலமாக மின்குமிழ் எரியாமை  மற்றும் அண்மையில் உள்ளவர்களுக்கு துர்நாற்றம்  வீசுதல் மற்றும் சிற்சில காரணங்களால் ஏற்பட்ட சந்தேகத்தினால் கதவை உடைத்து உள்ளே உறவினர்கள் சென்றனர்.

மிகவும் மோசமான நிலையில் அவரது பூதஉடல் அங்கே காணப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் மற்றும் பொது மக்களின் உதவியுடன் உடல் வெளியே கொண்டுவரப்பட்டது.

இவர் இறந்து 15 நாட்களை தாண்டியிருக்கும் என அவர் உடலின் அழுகிய தோற்றத்தை கொண்டு பேசபடுகின்றது.

இவர் 8வருடங்கள் முன்பிருந்தே தியானத்தில் ஈடுபடுபவர் என கூறப்படுகிறது.மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here