நாளையும், நாளை மறுநாளும் கொழும்பில் நீர்வெட்டு?

0
102

கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பின் மேம்படுத்தல் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவிருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாகவும், கொழும்பு 04இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here