நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியில் விபத்து – இருவர் படுகாயம் சாரதி கைது!!

0
181

நாவலபிட்டி கம்பள பிரதான வீதியில் விபத்து இருவர் படுகாயம் சாரதி கைதுநாவலபிட்டியவில் இருந்து கம்பளை நோக்கி சென்ற பாரஊறுதியும் கொழும்பில் இருந்து நாவலபிட்டியை நோக்கி பயணித்த மற்றுமொரு பாரஊறுதியும் நேருக்கு நேர் மோதி நாவலபிட்டிய வரக்காவ புகையிரத பாதுகாப்பு கடவைக்கு அருகாமையில் நேருக்கு நேர்மோதி விபத்துக்குள்ளாகியத்தில் இருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருப்பதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த விபத்து 21.02.2018. புதன்கிழமை மாலை 04மணி அளவில் இடம் பெற்றுள்ளதாகவும் கொழும்பில் இருந்து நாவலபிட்டிவை நோக்கிவந்த பாரஊறுதியின் சாரதி நாவலபிட்டி பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

DSC00168 01 (1) DSC00159 DSC00161

நாவலபிட்டி வரக்காவ பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த பாரஊறுதியை மோதிய மற்றுமொறு பாரஊறுதி அதிகவேகத்தை கட்டுபடுத்த முடியாமல் போனதற்கே இந்த விபத்துக்கான காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட சாரதி 22.02.2018 கம்பளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது .

(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதிஸ்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here