நீர்ப்பாசன கால்வாயில் விழுந்து 01 வயது 08 மாத சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ராஜாங்கனை பகுதியில் உள்ள ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் பிரதான நீர்ப்பாசன கால்வாயில் விழுந்து 01 வயது 08 மாத சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருந்த குழந்தை ராஜாங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த குழந்தையில் சடலம், ராஜாங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.