நுண்கடன் தொல்லையால் 22வயதுடைய குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை- மட்டக்களப்பில் சம்பவம்!!

0
271

மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி பலியானதாக தெரியவந்துள்ளது.

மட்டக்கப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாவடிவேம்பு கிராமத்தில் நுண்கடன் தொல்லையால் 22வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சந்திரமோகன் கிருபைராசா என்ற மேசன் தொழிலாளி நேற்று (06/06) அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவரது தற்கொலையால் மனைவியும், ஐந்து வயது மகனும் அனாதையாகிய துயர சம்பவம் நடந்தெறி உள்ளதோடு பல நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற இவர்,

மீளச்செலுத்த மற்றுமொரு நிதி நிறுவனத்தை நாடிச் செல்லவிருந்த சந்தர்ப்பத்தில், மனஉளைச்சலுக்குள்ளாகி தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவரது பிரிவால் கதறிஅழும் குடும்பஸ்தினர் மத்தியில் சடலத்தை மீட்ட பொலிசார் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளதுடன் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here