பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்!

0
108

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரிய ஊழல்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளார்.

உள்ளுர் விமானப் போக்குவரத்தில் துஸ்பிரயோகம், இராணுவ வீரர்களை தமது அமெரிக்கா இல்லத்தில் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியமை மற்றும் போக்குவரத்தில் முறைகேடு உட்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவர் இன்று இவ்வாறு வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

ஏற்கனவே அவர் மீது காணிக் கொள்வனவில் மோசடி என்ற அடிப்படையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அதற்காக இரண்டு நீதிமன்றங்கள் பிணை வழங்கியுள்ளன.

அத்துடன் திவிநெகும நிதியில் மோசடி தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here