பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி

0
83

பாகிஸ்தானின் தேசிய விமான நிறுவனமான பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விற்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் அந்நாட்டு அதிகாரிகள் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மூன்று பில்லியன் டொலர் நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, தொடர்புடைய ஒப்பந்தம் கையெழுத்தான சில வாரங்களுக்குள், தேசிய விமான சேவை உள்ளிட்ட நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பாகிஸ்தானின் தேர்தல் பிப்ரவரி 8ஆம் திகதி நடைபெறும், மேலும் இது தொடர்பான 98 வீத பணிகள் முடிவடைந்துள்ளதாக காபந்து அரசாங்கத்தின் “தனியார்மயமாக்கல் அமைச்சர்” ஃபவாத் ஹசன் ஃபவாட் தெரிவித்தார்.

விமான சேவையை விற்பனை செய்வது தொடர்பான அமைச்சரவையின் ஒப்புதலையும் அடுத்த சில நாட்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here