கலவான பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது கல்லூரி ஆசிரியர் ஒருவரால் பிடிக்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக கலவான காவல்துறையினர் தெரிவித்தனர்.அந்த பாடசாலையில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவனே பாடசாலையில் கசிப்பு விற்றவராவார்.
குறித்த மாணவன் இந்த கசிப்பை தண்ணீர் போத்தலில் எடுத்து வந்து உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை காவல்துறையினர் தெரிவித்தனர்.