பேருந்தின் மிதிபலகையில் நின்றவர் விழுந்து உயிரிழப்பு!

0
39

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் தானாயம சந்திக்கு அருகில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்று மீண்டும் கொழும்பு நோக்கிப் பயணித்தது. இதன் போது பஸ்ஸின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here